செய்திகள்
புத்தாண்டு கொண்டாட்டம்

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள்

Published On 2020-12-30 09:55 GMT   |   Update On 2020-12-31 04:04 GMT
மத்திய அரசின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கூட்டம் சேர்வதை கட்டுப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதி உள்ளார். அதில், உருமாறிய கொரோனா பரவ அதிக வாய்ப்புள்ள அனைத்து நிகழ்வுகளையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும், டிசம்பர் 31, ஜனவரி 1ம் தேதி பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என கூறி உள்ளார். தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

இதனையடுத்து, சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நட்சத்திர ஹோட்டல், கேளிக்கை விடுதிகளில் உள்ள பார்களை இரவு 10 மணிக்கு மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை சாலையில் முற்றிலும் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அனைத்து மேம்பாலங்களும் நள்ளிரவில் மூடப்படும். நட்சத்திர ஹோட்டல், கேளிக்கை விடுதிகளில் தடையை மீறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tags:    

Similar News