செய்திகள்
தற்கொலை (கோப்புப்படம்)

தூத்துக்குடியில் பெண் தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2019-11-06 10:42 GMT   |   Update On 2019-11-06 10:42 GMT
தூத்துக்குடியில் கடன் தொல்லை காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி அண்ணாநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சுப்பையா. ஓய்வு பெற்ற ராணுவவீரர். இவரது மனைவி ராமலெட்சுமி (வயது 51). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

ராமலெட்சுமிக்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த தென்பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமலெட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News