செய்திகள்
கோப்புபடம்

அரிமளம் அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

Published On 2021-01-01 14:14 GMT   |   Update On 2021-01-01 14:14 GMT
அரிமளம் அருகே மணல் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிமளம்:

புதுக்கோட்டை மாவட்டம், கே.புதுப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கும்மங்குடி பகுதியில் கே.புதுப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த டிராக்டரை ேபாலீசார் மறித்தனர். போலீசார் நிற்பதை பார்த்த டிரைவர், டிராக்டரை அங்கேயே நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதையடுத்து போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து, தப்பியோடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News