செய்திகள்
வடகால் அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் பலி
வடகால் அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:
ஒரகடம் அடுத்த வடகால் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 25) வேலை செய்து வந்தார். நேற்று மாலை வேலை பார்த்துக் கொண்டு இருந்த போது மின்சாரம் தாக்கி மணிகண்டன் பலியானார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.