செய்திகள்
வேதாரண்யம் அருகே மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது
வேதாரண்யம் அருகே மதுபாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் மகாதேவன் அறிவுரையின்படி இன்ஸ்பெக்டர் சுப்பிரியா, சப்- இன்ஸ்பெக்டர் பத்மசேகர் மற்றும் போலீசார் செம்போடையில் சோதனையில் ஈடுபட்டபோது ஒரு கடையில் திருட்டுதனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த கடையில் இருந்து 175 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.32 ஆயிரத்து 780 ரொக்கம் ஆகியவற்றையும், பதுக்கி வைத்திருந்த எரிசாராயம் 50 லிட்டரையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அதே பகுதியை அன்பரசன் (வயது 42), சேகர்(42) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.