ஆன்மிகம்
14-ந்தேதி சித்திரை மாத கார்த்திகையில் முருகப்பெருமான்- தெய்வானை வீதி உலா ரத்து
திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் திருவாச்சி மண்டபத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் உலா வருதல் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை தினத்தன்று இரவு 7 மணியளவில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி தங்க மயில்
வாகனத்தில் அமர்ந்து மேளதாளங்கள் முழங்க நகர உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.
ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் வைரஸ் பரவலை தடுப்பதற்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் வருகிற 14-ந்தேதி சித்திரை மாத கார்த்திகை தினமாகும்.
இந்த நாளில் நகர் வீதிகளில் சுவாமி புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேசமயம் கோவிலுக்குள் திருவாச்சி மண்டபத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் உலா வருதல் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில்
நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாகனத்தில் அமர்ந்து மேளதாளங்கள் முழங்க நகர உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.
ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் வைரஸ் பரவலை தடுப்பதற்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் வருகிற 14-ந்தேதி சித்திரை மாத கார்த்திகை தினமாகும்.
இந்த நாளில் நகர் வீதிகளில் சுவாமி புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேசமயம் கோவிலுக்குள் திருவாச்சி மண்டபத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் உலா வருதல் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில்
நிர்வாகம் தெரிவித்துள்ளது.