செய்திகள்
சாத்தான்குளம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்காரர் கைது
சாத்தான்குளம் அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புகையிலை பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்காரரை கைது செய்தனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் தர்மாபுரியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மகன் சதீஷ்குமார் (வயது27). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தட்டார்மடம் சப்-இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையில் அங்கு வந்த போலீசார் பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் புகையிலை பதுக்கி விற்பனை செய்த சதீஷ் குமாரை கைது செய்தனர்.