செய்திகள்
கடன் பிரச்சனையில் தொழிலாளி தற்கொலை
நெல்லையில் கடன் பிரச்சனையால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
டவுன் பாரதியார் தெருவை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது 42), சலவை தொழிலாளி.
இவருக்கு அதிகளவு கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று அவர் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டவுன் பாரதியார் தெருவை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது 42), சலவை தொழிலாளி.
இவருக்கு அதிகளவு கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று அவர் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.