உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பெருமாநல்லூர் - பழங்கரையில் நாளை மின்தடை

Published On 2022-01-11 10:18 GMT   |   Update On 2022-01-11 10:18 GMT
அவினாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், தங்கம் கார்டன் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
திருப்பூர்:

பெருமாநல்லூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. 

அதன்படி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட பெருமாநல்லூர், கணக்கம்பாளையம், காளிபாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவப்பட்டி, பாண்டியன் நகர், எம்.தொட்டிபாளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிபாளையம், நெருப்பெரிச்சல், செட்டிபாளையம், வாவிபாளையம், தொரவலூர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. 

இதுபோல் பழங்கரை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட அவினாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், தங்கம் கார்டன், விஸ்வபாரதிபார்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் பள்ளி, ஸ்ரீராம்நகர், நல்லிகவுண்டம்பாளையம், கைகாட்டிபுதூர் ஒரு பகுதி, ரங்கா நகர் ஒரு பகுதி, ராஜன் நகர், ஆர்.டி.ஓ. அலுவலகம், கமிட்டியார் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாசலபதி நகர் ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News