செய்திகள்
காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய ராஜ்நாத் சிங்

ரஷியாவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ராஜ்நாத் சிங் மரியாதை

Published On 2020-09-04 00:58 GMT   |   Update On 2020-09-04 00:58 GMT
அரசுமுறை பயணமாக ரஷியா வந்துள்ள பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மாஸ்கோ நகரில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மாஸ்கோ:

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் இந்தியா தரப்பில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பங்கேற்றுள்ளார். அவர் நேற்று ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி ஜெனரல் சர்ஜெ ஷோய்குவை சந்தித்தார். பாதுகாப்புத்துறை மந்திரிகள் மட்டத்திலான இந்த சந்திப்பில் முக்கிய விவகாரங்கள் குறித்த ஆலோசனை நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பின்னர் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு ராஜ்நாத்சிங் வந்தார். அங்கு தூதரக வளாகத்தில் உள்ள மாகாத்மா காந்தி சிலைக்கு ராஜ்நாத் சிங் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

இதற்கிடையில், ஷாங்காய் கூட்டத்தில் பங்கேற்றுள்ள இந்திய பாதுகாப்புத்துறை ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடந்த சீன பாதுகாப்புத்துறை மந்திரி கோரிக்கை விடுத்துள்ளார்.

சீன பாதுகாப்புத்துறை மந்திரியின் கோரிக்கை தொடர்பாக தற்போதுவரை இந்தியா தரப்பில் இருந்து எந்த பதிலும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News