செய்திகள்
மின்னல் தாக்கி பலி

ஜார்க்கண்டில் மின்னல் தாக்கி 6 பேர் பலி

Published On 2019-09-17 16:59 GMT   |   Update On 2019-09-17 16:59 GMT
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 14 வயது சிறுவன் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.
ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜார்க்கண்டில் மின்னல் தாக்கியதில் 14 வயது சிறுவன் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். 

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், சத்பர்வா கிராமத்தில் மின்னல் தாக்கியதில் 14 வயது சிறுவன் பலியானான். செயின்பூர் கிராமத்தில் விவசாயி ஒருவர் மின்னல் தாக்கி பலியானார். சராய்தி கிராமத்தில் 50 வயது பெரியவரும் பலியானார்.

ஜார்கடா, டும்ரி மற்றும் சரையா செதுதி கிராமங்களில் தலா ஒருவர் என மொத்தம் 6 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மின்னல் தாக்கி பலியானோர் குடும்பத்துக்கு நிவாரண நிதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News