செய்திகள்
கோப்புபடம்

சிலிண்டரால் மனைவியை தாக்கிய கணவர் கைது

Published On 2021-10-08 11:48 GMT   |   Update On 2021-10-08 11:48 GMT
திருச்சியில், சிலிண்டரால் மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கே.கே.நகர்

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது 35). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்று மீண்டும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அனிதா (33) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டவர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது.

சம்பவத்தன்று கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் கோபால் வீட்டிலிருந்த கியாஸ் சிலிண்டர் எடுத்து அனிதாவை தாக்கியுள்ளார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் உள்ளவர்கள் இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த அனிதாவை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அனிதா அளித்த புகாரின்பேரில் கோபால் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News