செய்திகள்
தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் 5 லட்சம் தீபம் ஏற்றப்படும் நிகழ்ச்சி
தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தீபங்கள் ஏற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அயோத்தி:
தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் ஆண்டுதோறும் ‘தீபஉற்சவம்’ நடைபெறும். இந்த ஆண்டு அடுத்த மாதம் (நவம்பர்) 11 முதல் 13-ந்தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் அயோத்தி முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தீபங்கள் ஏற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் ஆண்டுதோறும் ‘தீபஉற்சவம்’ நடைபெறும். இந்த ஆண்டு அடுத்த மாதம் (நவம்பர்) 11 முதல் 13-ந்தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் அயோத்தி முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தீபங்கள் ஏற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே நிகழ்ச்சி நடத்தப்படும். அதன்படி குறைவான எண்ணிக்கையிலேயே பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்படுவார்கள். எனவே மக்கள் வீடுகளில் இருந்தே கண்டுகளிப்பதற்காக தீபஉற்சவம் நிகழ்ச்சி முழுவதும் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சிக்கான ஆலோசனை கூட்டம் ஒன்று நேற்று நடந்தது. இதில் போலீஸ் கமிஷனர் அகர்வால் உள்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டு தீபஉற்சவ ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.