செய்திகள்
தற்கொலை

மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை

Published On 2021-01-11 05:47 GMT   |   Update On 2021-01-11 05:47 GMT
சித்தூர் அருகே மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீகாளஹஸ்தி:

சித்தூர் மாவட்டம் புங்கனூர் மண்டலம் பகத்சிங் காலனியைச் சேர்ந்தவர் ரவி (வயது 25), கூலித்தொழிலாளி. இவர், கடந்த சில நாட்களாக மதுக்குடித்து விட்டு வீட்டுக்கு வந்து குடும்பத்தாருடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். அதேபோல் நேற்று முன்தினம் பகலில் மதுக்குடித்து விட்டு தள்ளாடியபடி போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதை, மனைவி சாரதா கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த ரவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புங்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News