செய்திகள்
மரணம்

சாத்தூர் அருகே யூனியன் அலுவலக காவலாளி மர்ம மரணம்

Published On 2021-01-17 07:06 GMT   |   Update On 2021-01-17 07:06 GMT
சாத்தூர் அருகே யூனியன் அலுவலக காவலாளி மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது56). இவர் சாத்தூர் யூனியன் அலுவலகத்தில் இரவு காவலாளியாக வேலைபார்த்து வந்தார். பொங்கல் அன்று இரவு பணிக்கு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. நேற்று அவரது மகன் மாரீஸ்வரன் யூனியன் அலுவலகம் சென்று பார்த்தார். அப்போது அங்கு மேஜையிலேயே ராமமூர்த்தி இறந்து கிடப்பது தெரியவர அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. ராமமூர்த்தி எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News