ஆண்டிப்பட்டி அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
தேனி:
ஆண்டிப்பட்டி அருகே ராஜதானி பகுதியில் அதிக அளவில் மணல் கடத்தல் நடப்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் ஆய்வாளர் (கணிமம்) கண்ணன் தலைமையில் அதிகாரிகள் ரோந்து சென்றனர்.
தொப்பம்பட்டியில் இருந்து கணேசபுரம் செல்லும் சாலையில் உடைந்த பாலத்தின் அருகே உள்ள ஓடையில் சிலர் பதிவெண் இல்லாத டிராக்டரில் சிலர் மணல் கடத்திக் கொண்டிருந்தனர்.
அதிகாரிகளை கண்டதும் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். டிராக்டரை பறிமுதல் செய்து ராஜதானி போலீசில் ஒப்படைத்தனர். மேலும் அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்ராஜா, தவபுதல்வனை தேடி வருகின்றனர்.
மயிலாடும்பாறை சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் தலைமையிலான போலீசார் கோம்பை தொழு சின்னசுருளி ஆற்றுப்படுகையில் ரோந்து சென்றனர். அப்போது மாட்டு வண்டியில் மணல் கடத்திய செவத்திவீரன் என்பவரை கைது செய்தனர்.
போடி தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் சூலப்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஜீப்பில் மணல் கடத்திய காமராஜை கைது செய்தனர்.