உள்ளூர் செய்திகள்
கைது

திருவலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 வயது சிறுவன்

Published On 2022-01-12 05:14 GMT   |   Update On 2022-01-12 05:14 GMT
திருவலம் அருகே வீடு புகுந்து 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 வயது சிறுவனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
வேலூர்:

வேலூர் மாவட்டம், திருவலம் அடுத்த கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் 7 வயது சிறுமி. இவரது பெற்றோர் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டனர்.

இதனால் தனியாக இருந்த சிறுமி வீட்டில் டி.வி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் வீட்டினுள் புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.

இதனால் சிறுமி அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்த பாட்டி அங்கு வந்தார்.

இதையடுத்து சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். இதுகுறித்து சிறுமியின் தாய் திருவலம் போலீசில் புகார் அளித்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வன் வழக்குப்பதிவு செய்து சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்தார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சிறுவன் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.

Tags:    

Similar News