செய்திகள்
வாக்குப்பதிவு

மதுரை ஒத்தக்கடையில் கள்ள ஓட்டுப்பதிவு?- வாலிபர் அதிர்ச்சி

Published On 2021-04-06 11:27 GMT   |   Update On 2021-04-06 11:27 GMT
அப்போது தேர்தல் அதிகாரிகள் “உங்களின் ஓட்டு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு உள்ளது என தகவல் தெரிவித்து உள்ளனர். இதனால் சரவணபாண்டி அதிர்ச்சி அடைந்தார்.

மதுரை:

மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்தவர் சரவணன் பாண்டி. இவர் இன்று காலை அங்கு உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஓட்டு போடச் சென்றார்.

அப்போது தேர்தல் அதிகாரிகள் “உங்களின் ஓட்டு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு உள்ளது என தகவல் தெரிவித்து உள்ளனர்.

இதனால் சரவணபாண்டி அதிர்ச்சி அடைந்தார். அவர் தேர்தல் அதிகாரியிடம் பூத் சிலிப் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். மேலும் தனது ஓட்டை மர்மநபர்கள் கள்ள ஓட்டாக பதிவு செய்து உள்ளனர் என புகார் தெரிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Tags:    

Similar News