செய்திகள்
ராஜேஷ் தோபே

தீபாவளிக்கு பிறகு 3-வது கொரோனா அலை அபாயம்: மந்திரி ராஜேஷ் தோபே எச்சரிக்கை

Published On 2021-10-20 02:16 GMT   |   Update On 2021-10-20 02:16 GMT
கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் சவாலான பணி மாநில நிர்வாகத்தின் முன் உள்ளது. கல்லூரி மாணவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போடவேண்டும் என்று சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.
மும்பை :

மராட்டியத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து உள்ளது. எனவே மாநிலத்தில் பல்வேறு புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் தீபாவளிக்கு பிறகு கொரோனா 3-வது அலை உருவாகும் அபாயம் இருப்பதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே எச்சரித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா 2-வது அலை இன்னும் முடியவில்லை. தற்போது உள்ள நிலவரப்படி 3-வது அலை உருவாக சாதகமான சூழல் இல்லை. ஆனால் தீபாவளி கொண்டாட்டத்திற்கு பிறகு 3-வது அலை அபாயம் இருப்பதாக மாநில கொரோனா பணிக்குழு எச்சரித்து உள்ளது. எனவே சூழலை ஆய்வு செய்து வருகிறோம்.

மாநிலத்தில் 9 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ் போடப்பட்டுள்ளது. 35 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசியும் போட்டு உள்ளனர். மாநிலத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை. கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் சவாலான பணி மாநில நிர்வாகத்தின் முன் உள்ளது. கல்லூரி மாணவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போடவேண்டும். 1½ கோடி மக்கள் உள்ள மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு கொரோனா உயிரிழப்பு கூட ஏற்படாதது மிகப்பெரிய சாதனையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News