செய்திகள்
அரசு இ-சேவை மையங்கள் காகித அளவிலேயே உள்ளது - ஐகோர்ட் அதிருப்தி
தமிழக அரசு இ-சேவை மையங்கள் காகித அளவிலேயே உள்ளது என சென்னை ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சென்னை:
நீலகிரி மாவட்டம் யானைகள் வழித்தடம் பகுதியில் அமைந்துள்ள மசினகுடி கிராமத்தில் டாஸ்மாக் கடை திறப்பதை எதிர்ப்பு தமிழக அரசு இ-சேவை மையம் மூலம் பல முறை புகார்கள் அளித்த பின்னரும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் ஐகோர்ட்டில் வழக்குத்தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்குவிசாரணையின்போது நீதிபதிகள் கூறியதாவது:-
மக்களின் குறைகளுக்கு தீர்வு காண கொண்டுவரப்பட்ட அரசு இ-சேவை மையங்கள் காகித அளவிலேயே உள்ளது
பொதுமக்களின் மனுக்களுக்கு பதிலளிக்காத அதிகாரிகளின் மெத்தன போக்குக்கும் கண்டனத்திற்குரியது.
என தெரிவித்தனர்.
#BREAKING : மக்களின் குறைகளுக்கு தீர்வு காண கொண்டுவரப்பட்ட அரசு இ-சேவை காகித அளவிலேயே உள்ளது
— Thanthi TV (@ThanthiTV) November 20, 2020
சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி
பொதுமக்களின் மனுக்களுக்கு பதிலளிக்காத அதிகாரிகளின் மெத்தன போக்குக்கும் கண்டனம்#ESevai#ChennaiHCpic.twitter.com/ra5QNBXXi2