செய்திகள்
கோப்பு படம்

தூத்துக்குடியில் அனல்மின் நிலைய ஒப்பந்தகாரர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Published On 2020-01-14 12:09 GMT   |   Update On 2020-01-14 12:09 GMT
தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தகாரர்கள் சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் டி.டி.பி.எஸ். நுழைவு வாயிலில் நடைபெற்றது.
தூத்துக்குடி:

தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தகாரர்கள் சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் டி.டி.பி.எஸ். நுழைவு வாயிலில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒப்பந்தகாரர்கள் சங்க தலைவர் அன்புராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் முத்து ராமலிங்கம், பொருளாளர் ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் அனல்மின் நிலைய ஒப்பந்தகாரர்களுக்கு 8 மாதம் பில் நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விநியோகஸ்தர்களுக்கு 9 மாதம் பில் நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ரமேஷ், சேவியர், ஜான், பாலகிருஷ்ணன், துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News