லைஃப்ஸ்டைல்
கரம் மசாலா பொடி

கடையில வாங்காதீங்க.. வீட்டிலேயே செய்யலாம் கரம் மசாலா பொடி

Published On 2021-04-08 09:32 GMT   |   Update On 2021-04-08 09:32 GMT
கரம் மசாலா பொடியை கடையில் வாங்கி உபயோகித்து இருப்பீங்க. இன்று வீட்டிலேயே சுலபமான முறையில் கரம் மசாலா பொடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்

பெருஞ்சீரகம் (சோம்பு) - 100 கிராம்
பட்டை - 10 கிராம்
கிராம்பு - 10 கிராம்
அன்னாசிப்பூ - 10 கிராம்
ஏலக்காய் - 10 கிராம்

செய்முறை

எல்லா பொருள்களையும் வெயிலில் 2 மணி நேரம் காய வைத்துக் கொள்ளவும்.

அல்லது அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டில் எல்லா பொருள்களையும் போட்டு கிளறி ஆற விடவும்.

நன்றாக ஆறிய பின் மிக்ஸ்சியில் திரிக்கவும்.

பிறகு பேப்பரில் பரப்பி வைக்கவும். சூடு ஆறியதும் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும்.

கரம் மசாலா பொடியை பிரியாணி, குருமா வகைகளுக்கு உபயோகப்படுத்தலாம்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Tags:    

Similar News