செய்திகள்
முசிறியில் லால்குடியைச் சேர்ந்த பால் வியாபாரி வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முசிறி:
முசிறியில் இருந்து தா.பேட்டை செல்லும் சாலையில் அண்ணா நெசவாளர் காலனி அருகே வேப்ப மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் தெரியாத நபர் பிணமாக இருந்துள்ளார்.
இதுகுறித்து அப்பகுதியினர் முசிறி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து முசிறி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இறந்து போன நபர் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து போனவர் லால்குடி ரெட்டியார் தெருவை சேர்ந்த பால் வியாபாரி சரவணன் (வயது 33) என்பதும், கடந்த 15-ந்தேதி திருவாரூர் செல்வதாக கூறி சென்ற இவர், முசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.