உள்ளூர் செய்திகள்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் எய்ட்ஸ் தொற்று இல்லா நிலையை உருவாக்கிட உறுதியேற்போம்: மு.க.ஸ்டாலின்

Published On 2021-12-01 04:48 GMT   |   Update On 2021-12-01 08:43 GMT
உலக எய்ட்ஸ் தினமான இன்று, தமிழ்நாட்டில் தொற்று இல்லா நிலையை உருவாக்கிட உறுதியேற்போம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:

உலக எய்ட்ஸ் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

இந்நிலையில், எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை ஒதுக்கி வைக்காமல் அன்பால் அரவணைத்து வாழ வைப்போம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து, மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

உலக எய்ட்ஸ் தினமான இந்நாளில், தமிழ்நாட்டில் தொற்று இல்லா நிலையை உருவாக்கிட உறுதியேற்போம்!

தொற்றுடன் வாழ்பவரை ஒதுக்காமல், நம்மில் ஒருவராக அன்பால் அரவணைத்து; ஆதரவுக்கரம் நீட்டி வாழ வைப்போம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு பதிவிட்டிருந்தார்.

இதையும் படியுங்கள்.. இன்று உலக எய்ட்ஸ் தினம் - பிரமாண்ட மணல் சிற்பத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்திய கலைஞர்
Tags:    

Similar News