செய்திகள்
கைது

மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

Published On 2021-01-20 07:30 GMT   |   Update On 2021-01-20 07:30 GMT
உளுந்தூர்பேட்டை அருகே மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
உளுந்தூர்பேட்டை:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியை சேர்ந்தவர் சக்திதாசன் (வயது 19). பிளஸ்-2 படித்து வருகிறார்.

இவர் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் 16 வயது மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்தார்.

இதனால் அந்த மாணவி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சக்திதாசனை கைது செய்தனர்.

Tags:    

Similar News