செய்திகள்
மு.க.ஸ்டாலின்

இடைத்தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றிபெறும்- மு.க.ஸ்டாலின் பேட்டி

Published On 2019-10-11 07:19 GMT   |   Update On 2019-10-11 07:19 GMT
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி தான் மாபெரும் வெற்றி பெறும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கேள்வி:- பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு சீன அதிபர் மகாபலிபுரம் வருகை தர உள்ளது பற்றி தங்கள் கருத்து?



பதில்:- நான் ஏற்கனவே அதை வரவேற்றிருக்கிறேன். பயனுள்ள பயணமாக அமையும் என்ற அடிப்படையில், என்னுடைய கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன்.

கேள்வி:- இந்திய நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் சரிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. இந்தச் சந்திப்பினால், தொழில்கள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:- அதனைப் பற்றி நான் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.

கேள்வி:- நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் பற்றி உங்கள் கருத்து?

பதில்:- வரப்போகிற இடைத்தேர்தலில் நாங்குநேரியாக இருந்தாலும், விக்கிரவாண்டியாக இருந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிதான் மாபெரும் வெற்றி பெறப் போகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News