ஆன்மிகம்
ஆலய வழிபாடு

ஆலய வழிபாடு ஏன்?

Published On 2019-11-26 06:59 GMT   |   Update On 2019-11-26 06:59 GMT
எல்லா இடங்களிலும் நிறைந்துள்ள இறையருளானது, மந்திர- யந்திர சக்திகளினால் ஒன்றாக திரட்டி ஆலயங்களில் வைக்கப்பட்டுள்ளது.
சூரியனுடைய ஒளிக்கதிர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்திருந்தாலும், வெயிலில் ஒரு காகிதத்தையோ அல்லது பஞ்சையோ வைத்தால் அது நன்றாக காயுமே தவிர தீப்பற்றாது.

அதே வெயிலில் சூரியகாந்தக் கண்ணாடியின் கீழ் வைக்கப்படும் காகிதமோ அல்லது பஞ்சோ சிறிது நேரத்தில் தீப்பற்றி எரிவதைக் காண முடியும். எங்கும் பரந்துள்ள சூரிய ஒளிக்கதிர்களை சூரியகாந்த கண்ணாடியானது சேர்த்து ஒன்றாக்கி அனுப்புவது போல, எல்லா இடங்களிலும் நிறைந்துள்ள இறையருளானது, மந்திர- யந்திர சக்திகளினால் ஒன்றாக திரட்டி ஆலயங்களில் வைக்கப்பட்டுள்ளது.

அதனால்தான் ஆலய வழிபாடு மிகவும் அவசியமானதாகிறது.
Tags:    

Similar News