ஸ்லோகங்கள்
ஸர்வ மங்களா தேவி

ஸர்வ மங்களா தேவி காயத்ரி மந்திரம்

Published On 2022-03-05 06:06 GMT   |   Update On 2022-03-05 06:06 GMT
ஸர்வ மங்களா தேவியை வணங்கி வந்தால், பயணங்களில் பாதுகாப்பு உறுதியாகும். அனைத்து வித மங்களங்களும் வந்துசேரும். இந்த நித்யா தேவியின் கடைக்கண் பார்வை அனைத்து அன்பரையும் காக்கின்றது.
இந்த தேவி பொன்னிற மேனியில் நவரத்தினங்களும் அலங்கரிக்க, தலையில் வைடூர்ய மகுடம் சூடியிருக்கிறாள். இந்த நித்யா தேவியின் கடைக்கண் பார்வை அனைத்து அன்பரையும் காக்கின்றது. இந்த தேவி, நான்கு கரங்களிலும் மாதுளம்பழம், தங்கப் பாத்திரம் ஏந்தி அபய, வரத முத்திரை தரித்துள்ளாள். சிவப்புப் பட்டு உடுத்தி, சர்வ மங்களமும் பொருந்திய தேவியாக அருள்பாலிக்கிறாள். இவளைச் சுற்றிலும் எழுபத்திரண்டு சக்திகள் காவலாய் உள்ளதாய் புராணங்கள் பகர்கின்றன. இந்த தேவியை வணங்கி வந்தால், பயணங்களில் பாதுகாப்பு உறுதியாகும். அனைத்து வித மங்களங்களும் வந்துசேரும்.

வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை திரயோதசி, தேய்பிறை திருதியை.

மந்திரம்:-

ஓம் ஸர்வமங்களாயை வித்மஹே
சந்த்ராத்மிகாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்
Tags:    

Similar News