ஆன்மிகம்
கொள்ளிடம் அருகே வட ரெங்கநாதர் கோவிலில் தீர்த்தவாரி
வட ரெங்கநாதருக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ரெங்கநாதர் வீதிஉலா நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் இந்து சமயஅறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வட ரெங்கநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி பவுர்ணமியை முன்னிட்டு வட ரெங்கநாதருக்கு தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.
இதையொட்டி வட ரெங்கநாதருக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ரெங்கநாதர் வீதிஉலா நடைபெற்றது. பின்னர் காவிரி ஆறு சங்கமிக்கும் இடமான கொள்ளிடம் ஆற்றங்கரையில் தீர்த்தவாரி நடைபெற்றது.