செய்திகள்
கும்பகோணம் அருகே விவசாயி வயலில் மின் மோட்டார் திருட்டு
கும்பகோணம் அருகே விவசாயி வயலில் மின் மோட்டார் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவாமிமலை:
கும்பகோணத்தை அடுத்த ஏராகரம், மேலத்தெருவை சேர்ந்தவர் சரவணன்(வயது 40). விவசாயியான இவர், தனது வயலில் சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மின்மோட்டார் அமைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை வயலுக்கு சென்று பார்த்த போது, மின் மோட்டாரை காணவில்லை. அதனை யாரோ மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன் இதுபற்றி சுவாமிமலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.