உள்ளூர் செய்திகள்
டாஸ்மாக்

தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் 11 சதவீதம் அதிகரிப்பு

Published On 2022-01-24 13:12 GMT   |   Update On 2022-01-24 13:12 GMT
தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரை டாஸ்மாக் மூலம் 19,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
சென்னை:

தமிழ்நாட்டில் மது விற்பனையை அரசே பொறுப்பேற்று நடத்தி வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த 1983-ம் ஆண்டு முதல் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.

மக்களை பாதிக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை படிப்படியாக குறைக்கப் போவதாக சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. அறிவித்தது. ஆனாலும் டாஸ்மாக் மூலம் வரும் மது விற்பனை வருமானம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தபடி உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் 11 சதவீதம் அதிகரித்துள்ளது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

2021-ம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை 21,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. தமிழகத்தில் 2020-ம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை 19,000 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. 

இதன்மூலம் தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் 11 சதவீதம் அதிகரித்துள்ளது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News