செய்திகள்
கம்பத்தில் வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு
கம்பத்தில் வீட்டில் தூங்கிய பெண்ணிடம் மர்ம நபர் நகையை பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்பம்:
கம்பம் சுப்பிரமணிய கோவில் தெருவை சேர்ந்தவர் குருநாதன். இவரது மனைவி முத்துமணி (வயது 28). இவர் நேற்று முன்தினம் வீட்டின் கதவை பூட்டாமல் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது இரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் முத்துமணி கழுத்தில் அணிந்து இருந்த நகையை பறித்து சென்று விட்டார்.
இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.