செய்திகள்
நீட் தேர்வு

நீட் தேர்வு ஆள் மாறாட்டம் - வாணியம்பாடி மாணவரின் தந்தைக்கு ஜாமீன்

Published On 2019-12-04 06:18 GMT   |   Update On 2019-12-04 06:18 GMT
நீட் தேர்வு ஆள் மாறாட்ட மோசடியில் கைதான வாணியம்பாடி மாணவரின் தந்தைக்கு ஜாமீன் வழங்கி தேனி கோர்ட்டு உத்தரவிட்டது.
தேனி:

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா சேர்ந்தார். இதனையடுத்து போலீசார் அவரையும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசனையும் கைது செய்தனர். இதனையடுத்து நீட் தேர்வு ஆள் மாறாட்ட மோசடியில் மாணவர்கள், அவர்களது பெற்றோர் என 10 பேரை தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

உயர் நீதிமன்ற மதுரை கிளை மாணவர்கள் உதித் சூர்யா, இர்பான் உள்பட 4 பேருக்கு ஜாமீன் வழங்கியது. மாணவர்களின் பெற்றோர் டாக்டர் வெங்கடேஷ், டேவிஸ், சரவணன் உள்ளிட்டோருக்கு தேனி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

தேனி தேக்கம்பட்டி சிறையில் இருந்த வாணியம்பாடியைச் சேர்ந்த மாணவர் முகமது இர்பானின் தந்தை முகமது சபியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணை செய்த நீதிபதி பன்னீர்செல்வம், முகமது சபிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News