செய்திகள்
பிரதமர் மோடி

தமிழ் மொழியும், தாய்நாடும் இரு கண்கள் என நினைத்தவர் பாரதியார் - பிரதமர் மோடி புகழாரம்

Published On 2020-12-11 12:05 GMT   |   Update On 2020-12-11 18:05 GMT
மகாகவி பாரதியாரின் 138-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
புதுடெல்லி:

மகாகவி பாரதியாரின் 138-வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரதியின் புகைப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிலையில், பாரதியாரின் 138-வது பிறந்தநாளையொட்டி சர்வதேச பாரதி விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, தமிழக முதல்மந்திரி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர். 

இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-

* பாரதியாரின் எழுச்சியை இன்றைய இந்தியாவில் நான் பார்க்கிறேன் 

* ஜகத்தில் உள்ளோர் எதிர்த்த போதிலும் அச்சமில்லை என்றவர் பாரதி 

* துணிச்சலாக செயல்பட்டவர் மகாகவி பாரதி

* பழமை மற்றும் புதுமையை இணைத்து இந்தியாவை உருவாக்க பாரதி எண்ணினார் 

* தமிழ் மொழியும், தாய்நாடும் இரண்டு கண்கள் என பாரதி நினைத்தார் 

* பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் முன்னேற்றம் குறித்தும் பாரதி பேசினார் 

* பெண்கள் வலிமை பெற வேண்டும், ஆண்களுக்கு நிகராக உயர வேண்டும் என எண்ணியவர் பாரதி 

* பாரதியாரின் புத்தகங்களை நாடு முழுவதும் படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்

என்றார். 




Tags:    

Similar News