செய்திகள்
தமிழ் மொழியும், தாய்நாடும் இரு கண்கள் என நினைத்தவர் பாரதியார் - பிரதமர் மோடி புகழாரம்
மகாகவி பாரதியாரின் 138-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
புதுடெல்லி:
மகாகவி பாரதியாரின் 138-வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரதியின் புகைப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிலையில், பாரதியாரின் 138-வது பிறந்தநாளையொட்டி சர்வதேச பாரதி விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, தமிழக முதல்மந்திரி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-
* பாரதியாரின் எழுச்சியை இன்றைய இந்தியாவில் நான் பார்க்கிறேன்
* ஜகத்தில் உள்ளோர் எதிர்த்த போதிலும் அச்சமில்லை என்றவர் பாரதி
* துணிச்சலாக செயல்பட்டவர் மகாகவி பாரதி
* பழமை மற்றும் புதுமையை இணைத்து இந்தியாவை உருவாக்க பாரதி எண்ணினார்
* தமிழ் மொழியும், தாய்நாடும் இரண்டு கண்கள் என பாரதி நினைத்தார்
* பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் முன்னேற்றம் குறித்தும் பாரதி பேசினார்
* பெண்கள் வலிமை பெற வேண்டும், ஆண்களுக்கு நிகராக உயர வேண்டும் என எண்ணியவர் பாரதி
* பாரதியாரின் புத்தகங்களை நாடு முழுவதும் படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்
என்றார்.
#JUSTIN: பாரதியாரின் 138-வது பிறந்தநாளையொட்டி சர்வதேச பாரதி விழா - பிரதமர் மோடி சிறப்புரை
— Thanthi TV (@ThanthiTV) December 11, 2020
* ஜகத்தில் உள்ளோர் எதிர்த்த போதிலும் அச்சமில்லை என்றவர் பாரதி
* பழமை மற்றும் புதுமையை இணைத்து இந்தியாவை உருவாக்க பாரதி எண்ணினார் - பிரதமர் மோடி #PMModi | #BharathiyarJayanthipic.twitter.com/OUD1kNYHsR