செய்திகள்
மரணம்

ஆலங்குடியில் கிணற்றில் விழுந்து மூதாட்டி பலி

Published On 2019-09-23 12:15 GMT   |   Update On 2019-09-23 12:15 GMT
ஆலங்குடியில் கிணற்றில் விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தேரோடும் மேலவீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்.இவரது மனைவி புஷ்பம்(வயது70). இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர்.

காலையில் வீட்டின் பின்புறமாக சென்றபோது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார். உடனே ஆலங்குடி தீயணைப்பு மற்றும் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு குழுவினர் மற்றும் போலீசார் கிணற்றில் விழுந்த புஷ்பத்தை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூதாட்டி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News