உள்ளூர் செய்திகள்
மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது
மோகன்குமார் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் வினீத் உத்தரவிட்டார்.
உடுமலை:
உடுமலை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த தம்பதி கேரளாவில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் மனநலம் பாதித்த தங்கள் 27 வயது மகளோடு சொந்த ஊர் கோவில் திருவிழாவுக்கு வந்திருந்தார்கள்.
தாய்,தந்தை வெளியில் சென்றிருந்த போது அவர்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரான மோகன்குமார் என்பவர் மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து பெண்ணின் தாயார் அளித்த புகாரின் பேரில் உடுமலை மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்குப்பதிவு செய்து,மோகன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தர்ர.
இந்தநிலையில் மன நலம் பாதித்த பெண்ணை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த மோகன்குமார் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சஷாங் ஷாய் பரிந்துரை செய்தார்.
அதனடிப்படையில் மோகன்குமார் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் வினீத் உத்தரவிட்டார்.