செய்திகள்
தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார் ஆர்.என்.ரவி

தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவியேற்றார் ஆர்.என்.ரவி

Published On 2021-09-18 05:12 GMT   |   Update On 2021-09-18 07:00 GMT
தமிழகத்தின் 15-வது ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்றார். அவருக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை:

தமிழக ஆளுநராக பதவி வகித்து வந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து புதிய ஆளுநரின் பதவியேற்பு விழா கவர்னர் மாளிகையில் மண்டபம் அருகே உள்ள திறந்தவெளி புல்வெளி அரங்கில் நடைபெற்றது.

இன்று காலை தமிழகத்தின் 15-வது ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்றார். அவருக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.




விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், நீதிபதிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பங்கேற்றார்கள்.

Tags:    

Similar News