உள்ளூர் செய்திகள்
அம்மன் கோவிலில் நடந்த கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே நாவலூர் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் தர்மகர்த்தாவாக முத்துசாமியும் (வயது 40), அதே கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் (22) பூசாரியாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
சுரேஷ்குமாரின் பாட்டி சின்னபிள்ளை நாள்தோறும் மாலையில் கோயிலுக்குச் சென்று, விளக்கேற்றி வைத்து வருகிறாராம். இந்நிலையில் சம்பவத்தன்று மாலை விளக்கேற்றச் சென்றபோது, கோயிலின் உள்ளேயிருந்த 6 கரகங்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கோயில் அருகிலுள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் கோயிலில் வைத்திருந்த கரகங்களைத் திருடிச்சென்றது தெரியவந்தது.
இவற்றின் மதிப்பு சுமார் ரூ. 50 ஆயிரம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் அருகே நாவலூர் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் தர்மகர்த்தாவாக முத்துசாமியும் (வயது 40), அதே கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் (22) பூசாரியாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
சுரேஷ்குமாரின் பாட்டி சின்னபிள்ளை நாள்தோறும் மாலையில் கோயிலுக்குச் சென்று, விளக்கேற்றி வைத்து வருகிறாராம். இந்நிலையில் சம்பவத்தன்று மாலை விளக்கேற்றச் சென்றபோது, கோயிலின் உள்ளேயிருந்த 6 கரகங்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கோயில் அருகிலுள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் கோயிலில் வைத்திருந்த கரகங்களைத் திருடிச்சென்றது தெரியவந்தது.
இவற்றின் மதிப்பு சுமார் ரூ. 50 ஆயிரம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.