செய்திகள்
செஞ்சி அருகே சாராயம் பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது
செஞ்சி அருகே சாராயம் பதுக்கி வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செஞ்சி:
செஞ்சி போலீசார் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது ராஜாம்புலியூர் கிராமத்தில் விற்பனை செய்வதற்காக சாராயம் பதுக்கி வைத்திருந்ததாக அதே ஊரை சேர்ந்த ஏழுமலை(வயது 38), மகேந்திரன்(40), குறிஞ்சிப்பை கிராமத்தை சேர்ந்த சுதாகர்(30) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.