செய்திகள்
கோப்புப்படம்.

கள்ளக்காதல் பிரச்சினையில் பனியன் தொழிலாளி படுகொலை

Published On 2021-07-22 14:39 GMT   |   Update On 2021-07-22 14:39 GMT
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியை சேர்ந்த முருகேஸ்வரி (50) என்பவருடன் சந்தோஷ் குமாருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது.
திருப்பூர்:

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 30). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள ஒரு வாடகை வீட்டில்  குடும்பத்துடன் தங்கியிருந்து பனியன் நிறுவன வேலைக்கு சென்று வந்தார்.

கொரோனா ஊரட ங்கு காரணமாக கடந்த  2மாதங்களுக்கு முன்ப
சந்தோஷ்குமார் மனைவி, குழந்தைகளை நீடாமங்கலத்தில் விட்டு விட்டு திருப்பூரில் உள்ள வீட்டில் தனியாக தங்கியிருந்து பணிக்கு சென்றார். அவருடன் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் தினமும் செல்போன் மூலம் பேசி வந்தனர்.

கடந்த  3 நாட்களாக    சந்தோஷ்குமார் செல்போனை எடுக்கவில்லை.இதனால் என்ன நடந்தது என்று தெரியாமல் தவித்த மனைவி மற்றும் உறவினர்கள் சந்தோஷ் குமாரை தேடி திருப்பூர்  வந்தனர்.  வீட்டிற்கு சென்று பார்த்த போது சந்தோஷ்குமார் இல்லை. பக்கத்து  வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டபோது,  சில தினங்களுக்கு முன்பு 2பேர் வந்து பிரச்சினை செய்ததுடன் சந்தோஷ்குமாரை கூடவே அழைத்து சென்றதாகவும்  தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சந்தோஷ்குமாரை கண்டுபிடித்து தரும்படி வீரபாண்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வந்தனர். சந்தோஷ்குமாருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தியபோது, திருப்பூர் வீரபாண்டி  கல்லாங்காடு பகுதியை சேர்ந்த முருகேஸ்வரி (50) என்பவருடன்    சந்தோஷ் குமாருக்கு தொடர்பு இருந்தது   தெரியவந்தது.

இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறிய துடன், அதன் மூலம்  முருகேஸ்வரியிடம் சந்தோஷ்குமார் கடனாக பணம் வாங்கியுள்ளார். இதனால்  2பேருக்கும் இடையே  பணம்&கொடுக்கல் வாங்கல் தகராறு ஏற்பட்டு ள்ளது. இந்த பிரச்சினை காரண மாக   கடந்த சில நாட்களுக்கு முன்பு  சந்தோஷ்குமார் வீட்டிற்கு முருகேஸ்வரியின் மகன் ஆரோக்கியராஜ் (27) மற்றும் அவரது நண்பர் பாலசுப்பிரமணியன் (24) ஆகியோர் சென்று தகராறில்  ஈடுபட்டுள்ளதுடன் சந்தோஷ் குமாரை அங்கிருந்து அழைத்து சென்றுள்ளனர்.

கல்லாங்காடு  புதர் பகுதிக்கு அழைத்து சென்ற ஆரோக்கியராஜ், தாய் உடனான கள்ளத்தொடர்பை கைவிடுமாறும்,  வாங்கிய  பணத்தை திருப்பி தருமாறும் கேட்டு    நண்பருடன் சேர்ந்து  சந்தோஷ்குமாரை  சரமாரி தாக்கியுள்ளார்.இதில் சந்தோஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந் துள்ளார். பின்னர்  உடலை அங்குள்ள பாறைக்குழியில்  போட்டு தீ வைத்து எரித்து விட்டு 2பேரும் சென்று விட்டனர். தற்போது போலீசார் விசாரணையில்  2பேரும் சிக்கிக்கொண்டனர்.

அவர்களை போலீசார் கைது செய்து  தொடர்ந்து  விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்  சம்பவ இடத்திலேயே வைத்து சந்தோஷ்குமார் உடல்   பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.கள்ளக்காதல் பிரச்சி னையில் பனியன் நிறுவன தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News