செய்திகள்
கைது

வேலூரில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2021-08-25 10:06 GMT   |   Update On 2021-08-25 10:06 GMT
வேலூரில் கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
வேலூர்:

வேலூர் தெற்கு போலீசார் கொசப்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர்.

மேலும் அவரை போலீசார் சோதனை செய்தபோது அவரிடம் 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. அவர் வேலூர் கலாஸ்பாளையத்தை சேர்ந்த நவீன்குமார் (வயது 20) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News