ஆன்மிகம்
கும்பகோணம் சாரங்கபாணிசாமி கோவில்

கும்பகோணம் சாரங்கபாணிசாமி கோவில் சித்திரை தேரோட்டம் ரத்து

Published On 2021-04-12 08:45 GMT   |   Update On 2021-04-12 08:45 GMT
கொரோனா நோய் பரவல் காரணமாக தமிழக அரசு கோவில் விழாக்களை நடத்த தடை விதித்தது. இதனால் சாரங்கபாணி கோவில் தேராட்டம் ரத்து செய்யப்பட்டதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கும்பகோணம் சாரங்கபாணி சாமி கோவிலில் தை முதல் நாளில் தைத்தேரோட்டமும், சித்திரை மாதம் பவுர்ணமியில் சித்திரை தேரோட்டமும் நடத்தப்படும். இந்த தேரில் பிரம்மாண்டமான 4 குதிரைகள் பொருத்தப்பட்டு இருக்கும்.

அந்த குதிரைகள் தேரோட்டத்தின்போது ஆடி, அசைந்தபடி தேரில் பவனி வரும். இவ்வாறு பல்வேறு சிறப்புடைய கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரோட்டம் வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) நடத்துவதற்கு கோவில் நிர்வாகம் திட்டமிட்டு இருந்தது. இதையொட்டி கடந்த மாதம் தேர் கட்டுமானப்பணிக்கான பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.

இந்த நிலையில் கொரோனா நோய் பரவல் காரணமாக தமிழக அரசு கோவில் விழாக்களை நடத்த தடை விதித்தது. இதனால் சாரங்கபாணி கோவில் தேராட்டம் ரத்து செய்யப்பட்டதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தேரோட்டம் நடைபெற இருந்ததையையொட்டி தேர் கட்டுமான பணிகள் அணைத்தும் தீவிரமாக நடந்து வந்தன.

இந்த நிலையில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டதால் தேர் கட்டுமான பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் தேர் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த 50-க்கும் மேற்பட்ட தேர் கட்டமைப்பு வல்லுனர்கள் தேர் திருப்பணி பணிகளை கைவிட்டு வீடு திரும்பினர்.
Tags:    

Similar News