செய்திகள்
மாயம்

குமரியில் ஒரே நாளில் 4 இளம்பெண்கள் மாயம்

Published On 2021-08-29 13:18 GMT   |   Update On 2021-08-29 13:18 GMT
குமரியில் ஒரே நாளில் 4 இளம்பெண்கள் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில்:

கோட்டார் ரெயில்வே ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது மகள் ஆர்த்தி (22). சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஆர்த்தி, திடீரென மாயம் ஆனார். ஆர்த்தியை பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து கோட்டார் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஆர்த்தியை தேடி வருகிறார்கள்.

இரணியல் அடுத்த நெய்யூர் இரணியல் கோணம் பகுதியைச் சேர்ந்தவர் நீல மணிகண்டதாஸ், இவரது மனைவி அபிஷா (வயது 30). குடும்ப தகராறு காரணமாக அபிஷா, தனது கணவரை பிரிந்து மயிலோடு மங்கலம் பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த இரு மாதங்களுக்கு முன் பூ சாஸ்தான்விளை பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். கடந்த 25-ந்தேதி, தனது குழந்தையுடன் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் திடீரென மாயம் ஆனார். இது குறித்து அபிஷாவின் தாயார் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேர்கிளம்பி பகுதியைச் சேர்ந்தவர் இவாஞ்சலின் ரேஷ்மா (19). லேப் டெக்னீசியன் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை எட்வின் ஜோஸ், திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இரணியல் அருகே ஆளூர் புன்னவிளை பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன் (30). இவரது மனைவி சரண்யா (26). சம்பவத்தன்று சரண்யா, தனது மகளுடன் மாயம் ஆனார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இது குறித்து அய்யப்பன் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News