ஆன்மிகம்
ஜெகநாத பெருமாள் திருக்கல்யாண உற்சவம்

கும்பகோணம் அருகே ஜெகநாத பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

Published On 2021-08-13 06:51 GMT   |   Update On 2021-08-13 06:51 GMT
ஜெகநாத பெருமாள் இக்கோவிலில் செண்பகவல்லி தாயார் மற்றும் ஜெகன்நாத பெருமாள் உள்ளிட்ட சாமிகளுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.
கும்பகோணம் அருகே நாதன்கோவிலில் ஜெகநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று ஜெகநாத பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி செண்பகவல்லி தாயார் மற்றும் ஜெகன்நாத பெருமாள் உள்ளிட்ட சாமிகளுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News