செய்திகள்
சாமியார் சின்மயானந்தா

பாலியல் வழக்கில் கைதான சின்மயானந்தா பா.ஜனதாவில் இல்லை

Published On 2019-09-26 02:48 GMT   |   Update On 2019-09-26 02:48 GMT
பாலியல் வழக்கில் கைதான சின்மயானந்தா, தற்போது பா.ஜனதா உறுப்பினர் அல்ல என்று அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது.
லக்னோ:

பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட சுவாமி சின்மயானந்தா, பா.ஜனதா சார்பில் 3 தடவை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். வாஜ்பாய் அரசில் இணை மந்திரியாக பதவி வகித்துள்ளார்.



இந்நிலையில், அவர் தற்போது பா.ஜனதா உறுப்பினர் அல்ல என்று அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது. அனைத்து பதிவேடுகளும் மின்னணுமயமாக்கப்பட்டு விட்டதால், அவர் எப்போதிருந்து உறுப்பினர் அல்ல என்பதை சொல்ல இயலாது என்று கட்சி செய்தித்தொடர்பாளர் ஹரிச்சந்திர ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.


Tags:    

Similar News