செய்திகள்
மழை

மாவட்டம் முழுவதும் பரவலாக மழை- கலசபாக்கத்தில் 45 மில்லி மீட்டர் பதிவானது

Published On 2021-07-16 10:28 GMT   |   Update On 2021-07-16 10:28 GMT
அவ்வப்போது பெய்து வரும் மழையினால் மாவட்டத்தில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விவசாயப் பணிகளை தொடங்கி உள்ளனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நள்ளிரவில் குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் நள்ளிரவில் இருந்து விடிய, விடிய நேற்று அதிகாலை வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்தது. அவ்வப்போது பெய்து வரும் மழையினால் பல்வேறு பகுதிகளில் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. இந்த மழையினால் மாவட்டத்தில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விவசாயப் பணிகளை தொடங்கி உள்ளனர்.

தொடர்ந்து நேற்று பகலிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலையில் லேசான சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கலசபாக்கத்தில் 45 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது.

மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

செய்யாறு- 23, போளூர்- 21.2, ஆரணி மற்றும் சேத்துப்பட்டு- 20, செங்கம்- 18.2, வெம்பாக்கம்- 11, கீழ்பென்னாத்தூர்- 10.2, ஜமுனாமரத்தூர் மற்றும் வந்தவாசி- 14, திருவண்ணாமலை- 7.
Tags:    

Similar News