ஆன்மிகம்
கொடைக்கானலில் கிறிஸ்தவர்கள் சிலுவைப்பாதை ஊர்வலம்

கொடைக்கானலில் கிறிஸ்தவர்கள் சிலுவைப்பாதை ஊர்வலம்

Published On 2021-03-22 04:02 GMT   |   Update On 2021-03-22 04:02 GMT
கிறிஸ்தவர்களின் தவக்காலத்தையொட்டி கொடைக்கானல் வட்டார அனைத்து ஆலயங்களின் சார்பாக வட்டார திருயாத்திரை மற்றும் சிலுவைப்பாதை ஊர்வலம் நடைபெற்றது.
கிறிஸ்தவர்களின் தவக்காலத்தையொட்டி கொடைக்கானல் வட்டார அனைத்து ஆலயங்களின் சார்பாக வட்டார திருயாத்திரை மற்றும் சிலுவைப்பாதை ஊர்வலம் நேற்று நடைபெற்றது. மூஞ்சிக்கல் திருஇருதய ஆலயத்தில் தொடங்கிய ஊர்வலத்தை கொடைக்கானல் வட்டார அதிபரும், மூஞ்சிக்கல் பங்கு தந்தையுமான எட்வின் சகாய ராஜா தொடங்கி வைத்தார்.

இதில் இயேசுவின் பாடுகளை தியானித்த வண்ணம் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் சிலுவையை சுமந்த வண்ணம் சென்றனர். இந்த ஊர்வலம் அண்ணாசாலை, கோக்கர்ஸ்வால்க், செயின்ட் மேரிஸ் ரோடு வழியாக தூய சலேத் மாதா ஆலயத்தை அடைந்தது.

அங்கு சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் கொடைக்கானல் வட்டாரத்தை சேர்ந்த பங்குத்தந்தையர்கள், ஏஞ்சல், சேவியர் அருள் ராயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதன் பின்னர் அன்னதானம் நடந்தது.
Tags:    

Similar News