செய்திகள்
கலெக்டர் கிரண்குராலா நேரில் ஆய்வு

கள்ளக்குறிச்சி உள்பட 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் - கலெக்டர் கிரண்குராலா நேரில் ஆய்வு

Published On 2021-01-11 02:43 GMT   |   Update On 2021-01-11 02:43 GMT
கள்ளக்குறிச்சி உள்பட 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் கிரண்குராலா நேரில் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குட்பட்ட ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்கள் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.நினைவு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட உள்ளது. இதை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிரண்குராலா நேரில் பார்வையிட்டு வாக்கு எண்ணும் மையங்களில் கொரோனா தொடர்பான வழிகாட்டுதல்களை பின்பற்றுதல் மற்றும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைத்தல், வாக்கு எண்ணும் மையங்களில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றை விரைந்து தயார் செய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். இதைத்தொடர்ந்து நீலமங்கலம் கிராமத்துக்கு சென்ற கலெக்டர் கிரண்குராலா பொதுமக்களிடம் வாக்காளர் படிவங்கள் சரிப்பார்ப்பு குறித்து கேட்டறிந்தார்.
Tags:    

Similar News