செய்திகள்
கோப்பு படம்.

தாராபுரம் அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி

Published On 2021-04-23 20:45 GMT   |   Update On 2021-04-23 20:45 GMT
தாராபுரம் அருகே தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறிய விவசாயி எதிர்பாராத விதமாக கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தாராபுரம்:

தாராபுரம் அருகே உள்ள பொன்னாபுரத்தை அடுத்த கருங்காலி வலசை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 55). விவசாயி. இவர் கடந்த 22-ந் தேதி மதியம் தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறினார். தென்னை மர உச்சியில் உள்ள தேங்காயை பறிக்க தென்னமட்டையை கையில் பிடித்து தேங்காய் பறித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மட்டை திடீரென முறிந்தது. இதில் மாரிமுத்து தலைகீழாக வந்து தரையில் விழுந்த போது முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து இறந்தார்.

இது குறித்து தாராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். இறந்துபோன மாரிமுத்துவுக்கு ஒரு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
Tags:    

Similar News