செய்திகள்
கைது

காரைக்குடி அருகே வழிப்பறி வழக்கில் மேலும் ஒருவர் கைது

Published On 2020-09-19 13:54 GMT   |   Update On 2020-09-19 13:54 GMT
காரைக்குடி அருகே வழிப்பறி வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:

காரைக்குடி புதுசந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 54). ரியல் எஸ்டேட் புரோக்கர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இவரை நிலம் வாங்குவது குறித்து பேச வேண்டும் என்று கூறி கருவியபட்டிக்கு வருமாறு சிலர் அழைத்தனர். அதனையொட்டி சுப்பிரமணியம் தனது மோட்டார் சைக்கிளில் கருவியபட்டிக்கு சென்றார். அங்கு அவரை சூழ்ந்துகொண்ட 7 பேர் கொண்ட கும்பல் 7 பவுன் நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை மிரட்டி பறித்துக்கொண்டு தப்பிவிட்டது. இதுகுறித்து சுப்பிரமணியன் பள்ளத்தூர் போலீசில் புகார் செய்தார்.

இதில் 6 பேரை போலீசார் கைது செய்தனர் 6 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சத்யாநகரை சேர்ந்த ரவி(20) என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் அவரை நேற்று போலீசார் கைது செய்து அவரிடமிருந்து மோட்டார் சைக்கிளையும், நகைகளையும் கைப்பற்றினர்.
Tags:    

Similar News